Thursday, March 12, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home விளையாட்டு

அவுஸ்ரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று பலப்பரீட்சை!

by editor
September 24, 2022
in விளையாட்டு
0 0
A A
0
அவுஸ்ரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று பலப்பரீட்சை!
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

நாக்பூரில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் அவுஸ்ரேலிய அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின், முதல் போட்டியில் அவுஸ்ரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆகவே இப்போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கும். அவுஸ்ரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். அதேவேளை இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை தக்கவைக்கும்.

போட்டி நடைபெறும் நாக்பூர் ஆடுகளத்தை பொறுத்தவரை ஈரப்பதம் காரணமாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் உதவியாக இருக்கும்.

இதன்படி, இந்தியா அணியில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அக்ஸர் பட்டேல் அவுஸ்ரேலிய அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய இந்திய அணியை பொறுத்தவரை மொஹாலியில் நடைபெற்ற முதல் ரி-20 போட்டியில், இந்திய அணி 200க்கு அதிகமான ஓட்டங்களை பெற்றும் பந்துவீச்சாளர்களின் பொறுப்பின்மையால் இந்தியா அணி தோல்வியை தழுவியது.

இது, அவர்களின் பந்துவீச்சு பிரிவில் தற்போதைய சில குறைபாடுகளின் நியாயமான பிரதிபலிப்பாகும். கடைசி ஓவர்களில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்சல் பட்டேல் ஓட்டங்களை வாரி இரைத்தனர்.

அன்றைய போட்டியில், அக்சர் படேலைத் தவிர, மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தனர். இது இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பிரிவு பலவீனமாக இருப்பதை உணர்த்தியது.

ஆனால், துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரை விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

இன்றைய போட்டியில், ஹர்ஷல் படேலுக்கு மாற்றாக தீபக் சாஹர் உள்வாங்கப்படலாம். அத்துடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பும்ரா அணியுடன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்ரேலிய அணியைப் பொறுத்தவரை, டேவிட் வோர்னர் இல்லாத நிலையில், கேமரூன் கிரீன் அந்த பணியை சிறப்பாக செய்கிறார். அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்ட வரிசை வலுவாக உள்ளது. குறிப்பாக டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தனது கடைசி ஒன்பது சர்வதேச போட்டிகளில் ஒரு 20 பிளஸ் ஓட்டங்களை மட்டுமே குவித்துள்ளார்.

போட்டியின் சூழ்நிலையைப் பொறுத்து, அவுஸ்ரேலியா இன்னும் இடது கை துடுப்பாட்ட வீரர்களை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

இரு அணிகளிலும் வலுவான வீரர்கள் உள்ளதால், போட்டியின் வெற்றி யார் பக்கம் சாயப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்…

Related Posts

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்
இலங்கை

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

March 11, 2026
கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு
இலங்கை

கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு

March 5, 2026
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!
இலங்கை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

March 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை..!

உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை..!

March 11, 2026
இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

March 11, 2026
இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்..!

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்..!

March 11, 2026
CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்…!

CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்…!

March 11, 2026

Recent News

உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை..!

உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை..!

March 11, 2026
இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

March 11, 2026
இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்..!

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்..!

March 11, 2026
CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்…!

CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்…!

March 11, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version