யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்து ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.
தொடர்ந்து யாழ். மாவட்டஐக்கிய தேசிய கட்சியின்உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வைத்தியர்கள்,புத்திஜீவிகள்,விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.






Discussion about this post