மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி தம்புள்ளை கம்உதாவ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமைப் பதிவுக்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாக பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அப்போது மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவரது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Discussion about this post