தொலைபேசி அல்லது வட்ஸ்ஏப் ஊடாக நீங்கள் அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள் என இனந்தெரியாதவர்களால் அறிவிக்கப்பட்டால் அதனை நம்ப வேண்டாம் என மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அல்லது குறித்த அழைப்பு மற்றும் தகவல்களை 0765200290 என்ற இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறும் மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




Discussion about this post