ஓமானில் இருந்து 22,500 மெட்ரிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்குமதி செய்யப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவாசய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக விவாசய அமைச்சர் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு 4500 ரூபா விலைக் குறைப்புடன் 15,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.








Discussion about this post