பொலன்னறுவை, கதுருவெலவிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, மன்னம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கொட்டலி பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், மேலும் ஒருவரின் சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பஸ் மிக நீண்ட காலமாக இவ்வாறு மிக வேகமாக பயணித்து வந்ததாகவும், சாரதியின் அசமந்த போக்கே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.






Discussion about this post