திருப்பதியில் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
திருப்பதியில் ஆறு வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமலை திருப்பதிக்கு அலிபிரி மெட்டு பாதை வழியாக குடும்பத்தினருடன் நடைபயணம் மேற்கொண்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்தினருக்கு முன்னாள் வேகமாக நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை கொடூரமாக தாக்கியது தெரிய வந்தது.
கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்த பின்னரும் மீண்டும் ஒரு சிறுத்தையை பக்தர்கள் மலைப் பாதையில் பார்த்துள்ளனர். இந்நிலையில் தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
அந்த வகையில் மலைப் பாதைகளில் நடந்து செல்வோர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கு காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைபயணம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.
கோவைக்கு பெருமை சேர்த்து தந்த சிறுமி – சிலம்பத்தில் சாதனை புரிந்து அசத்தல்
தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இனிமேல் மலைப்பாதைகளில் 100 பேர் கொண்ட கூட்டத்துடன் ஒரு பாதுகாவலர் அனுப்பப்படுவார் என்று கூறினார். மேலும் மிருகங்கள் நடமாடும் பகுதிகளில், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதைகளில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் 10 மீட்டருக்கு ஒருவர் வீதம் பணியில் இருப்பார்கள் என்று கூறினார்.
மலைப்பாதைகளில் 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தர்மா ரெட்டி கூறியிருந்தார். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி வழஙப்பட்டு வருகிறது. குழந்தைகளை அழைத்துச் செல்வதிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post