இந்த வருட உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படுமா இல்லையா என்பதை விரைவில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
உயர்தரப் பரீட்சைகளை அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைக்குமாறு SJB பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
உயர்தரப் பரீட்சைகளை ஜனவரி 22 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்ன முன்மொழிந்தார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் வெளியிடப்படலாம் என்றும், அடுத்த வருட உயர்தரப் பரீட்சைகள் வழமை போன்று ஒக்டோபர் மாதம் நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி. கவிரத்னவுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், பிரேரணையினை ஒப்புக்கொண்டார், ஆனால் இறுதி முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் எட்டப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






Discussion about this post