மாத்தறை, தியலபே – தன்னபிட்டிஹேன பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதையடுத்து குறித்த பகுதியிலிருந்து 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட குறித்த பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மண்சரிவினால் உயிர்ச்சேதம் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவித்த பொலிஸார் இந்த மண்சரிவினால் 25 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






Discussion about this post