Saturday, March 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி  முறைமையை இரத்து செய்வது சாத்தியமற்றது – பிரதீபா மஹாநாம

by Editor
February 14, 2024
in இலங்கை
0 0
A A
0
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி  முறைமையை இரத்து செய்வது சாத்தியமற்றது – பிரதீபா மஹாநாம
Share on FacebookShare on Twitter

(இராஜதுரை ஹஷான்)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்,மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தற்போது சாத்தியமற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை’ பிரதான அம்சமாக காணப்படுகிறது.ஆகவே அரசியலமைப்பின் பிரதான அம்சமாக காணப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன்,மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு இரண்டு முறை பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.

ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் பெரும்பாலான நாடுகளில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தற்போது நடைமுறையில் இல்லை.பாராளுமன்றத்தை முன்னிலைப்படுத்திய அமைச்சரவை தலைமையிலான அரசாங்கங்கள் தான் தற்போது செயற்பாட்டில் உள்ளது,ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது சிறந்தது.

தற்போதைய பாராளுமன்றத்தின் மக்களாணை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமற்றது.ஆகவே தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது சாத்தியமற்றது என்றார்.

Related Posts

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு
இலங்கை

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு
இலங்கை

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மார்ச் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 12, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Recent News

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version