பெறுமதி சேர் வரியில் (VAT) சில விலக்குகளை வழங்குவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்களை VAT வரியிலிருந்து நீக்குவதற்கு தாம் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் VAT வரியில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதற்கும் நம்புவதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மதிப்பு கூட்டப்பட்ட வரி 18% ஆக உயர்த்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மார்ச் 06) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே இதனை தெரிவித்தார்.











Discussion about this post