ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் தீவிரமாகி வருகின்ற நிலையில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் மசகு எண்ணெய், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் 15 அம்ச திட்டத்தை கடந்த 25ஆம் திகதி வெளியிட்டார்.
அதில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தார்.
ஆனால், ஈரான் இதனை ஏற்கவில்லை. அதன்படி, நாளைக்குள் இவ் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரானுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கும் எனவும் அந்நாட்டின் மின் கட்டமைப்புகள், பாலங்கள் தகர்க்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்பது குறித்து விபரம் தெரியவில்லை.
இத் தாக்குதல் காரணமாக குடியிருப்பு கட்டிடம் சேதடைந்துள்ளதோடு, இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.




Discussion about this post