யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டின் விலை அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை தான் வாங்கிக்கொண்டதாக தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணக்கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை தான் கண்டதாகவும், இதன் மூலம் சீனாவுடனான யாழ்ப்பாணத்திற்கான தொடர்பு பழமையானது எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோட்டையில் உள்நாட்டவர்களுக்கு, 20 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 4 அமெரிக்க டொலரும் நுழைவு சீட்டு என அறவிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது





Discussion about this post