இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரபல பொலிவூட் நடிகர்களான சன்கி பாண்டே மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சர் ஹரின், டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.திரைப்பட தயாரிப்பு தளமாக இலங்கையை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்துடன், தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post