உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 80,000 வேட்பாளர்களுள் 20,000 வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகளுக்குச் சொந்தமான கடைகளை உறவினர்களுக்கு வாடகைக்கு விட்டமை மற்றும் முறையற்ற விதத்தில் ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, தரமற்ற பாதைகளை நிர்மாணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post