மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக பல வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் நெருக்கடி சமூக நன்கொடைகளின் விளைவாக ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குழந்தை புற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு தனியார் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய இரண்டிலும் மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்க ஆர்வமுள்ள அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் கண்டறியப்படும் நபர்களின் எண்ணிக்கையின் தீவிரம் குறித்து கலந்துரையாடும் போது, பதிவாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வெளிப்படையான அதிகரிப்பு தொடர்பில் அவர் கவலை தெரிவித்தார்.
ஒரு வருடத்தில், குறைந்தது 900 குழந்தைகளுக்கு புற்றுநோய் கண்டறிதல் செய்யப்படுகிறது, மேலும் சுமார் 250 இளைஞர்கள் நோயினால் இறகின்றனர்..
இருப்பினும் இளம் வயதினரிடையே காணப்படும் பெரும்பாலான வழக்குகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் குணப்படுத்தப்படலாம் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.






Discussion about this post