அர்ஜென்டினா – குரசாவ் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மேலும், அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலையை இந்த ஆட்டத்தில் அவர் எட்டினார். மெஸ்ஸியின் கோல்மழையால் 7-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி அதற்கு பிந்தைய போட்டிகளிலும் `சாம்பியன்` என்ற அந்தஸ்துடன் உற்சாகமாக விளையாடி வருகிறது. குரசவ்- அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான சர்வதேச நட்பு ரீதியிலான ஆட்டம் அர்ஜென்டினாவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி படைக்கப் போகும் அந்த சாதனையை காண ஒட்டுமொத்த மைதானமும் காத்திருந்தது. போட்டி தொடங்கியதுமே 11 மற்றும் 13வது நிமிடங்களில் மெஸ்ஸி கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முதல் இருபது நிமிடங்களுக்கு குரசவ் அணி அர்ஜென்டினாவுக்கு எதிராக தாக்குப்பிடித்து ஆடியது.





Discussion about this post