ஆசிரியக் கலாச்சாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பரிட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், www.doendts.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் அதனை பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






Discussion about this post