மாணவிகள், ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்த திருமணமான இளம் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பாடசாலையில், உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில் அப்பாடசாலையில் கல்வி கற்கும் 12 ஆம் தர மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இப்புகாரின் பேரில் கன்னியாகுமரி பொலிஸார் குறித்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. குறித்த நபர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகள், சக ஆசிரியைகள் உள்ளிட்ட பல பெண்களுடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளார். அத்துடன் அவர்களை ஆபாச வார்த்தைகள் கூறி மயக்கி அவர்களது நிர்வாண வீடியோக்களை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Discussion about this post