Sunday, March 29, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

நியதிகளுக்கு முரணாக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

by editor
November 30, 2022
in இலங்கை
0 0
A A
0
நியதிகளுக்கு முரணாக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
Share on FacebookShare on Twitter

கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் முடிவு – சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு

சுகாதார அமைச்சின் நியதிகளுக்கு முரணாக வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்களின் வழிகாட்டல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறும் டாக்டர்களுக்கே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சபையில் தெரிவித்த அமைச்சர், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவரென்றும்

தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27இன் கீழ் 02இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நாட்டில் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சுகாதார சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் குறிப்பிடும் போது உயிர்காக்கும் 14 வகையான அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 948 அத்தியாவசிய மருந்து பொருட்கள் தேவையானளவு கையிருப்பிலுள்ளன.

வெளிநாட்டு சந்தையில் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

அத்துடன் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் பில்லியன் கணக்கான நிதி செலவிடப்படுகிறது.

வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் கடந்த மாதங்களில் மருந்துப் பொருட்கள் கொள்வனவு மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் தற்போது நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மருந்துப் பொருட்கள் தாமதமின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐந்து வருட காலத்துக்கு வெளிநாடுளுக்கு செல்ல முடியுமென பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டது. இதுவரையான காலப்பகுதியில் 300 டாக்டர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஒரு டாக்டர் வெளிநாடு செல்லும் போது அவரது சேவை வெற்றிடம் முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டல் ஆலோசனையை சுகாதாரத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

ஒருசில மருத்துவர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி வெளிநாடு சென்றுள்ளார்கள்.

சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவுறுத்தல்களுக்கு முரணாக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவையில் ஈடுப்படுவதற்கும் தடையேற்படுத்தப்படும்.

அதேவேளை சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் டாக்டர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கவும்,வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில் அவர்களின் விடுமுறை தொடர்பான பத்திரங்களை ஆராயுமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!
இலங்கை

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
இலங்கை

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026

Recent News

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version