Tuesday, March 31, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்​ய கோரிக்கை

by editor
December 26, 2022
in இலங்கை
0 0
A A
0
ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்​ய கோரிக்கை
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான முன்னாள் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க விலங்கொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றத்தை அறியத்தருமாறு கோரி பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு நேற்று(25) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது.

பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பின் தலைவர், சட்டத்தரணி அமில எகொடமஹவத்த, சமூக செயற்பாட்டாளர் லெசில் டி சில்வா உள்ளிட்டவர்களும் பொலிஸ் தலைமையத்திற்கு சென்றிருந்தனர்.

ஆஷு மாரசிங்கவினுடையது என கூறப்படுகின்ற காணொளியின் உள்ளடக்கத்திற்கு அமைய அவர் பாரிய குற்றம் இழைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு தமது கடித்தில் சில விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.

யாரின் வழிகாட்டுதலுக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பேராசிரியர் ஆஷு மாரசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் இத்தகைய துன்புறுத்தல்கள் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் இலங்கையின் விலங்குகள் நலனுக்காக செயற்படுகின்ற முக்கிய அமைப்பாகும்.

விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.

விசாரணைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை தடுக்குமாறும் குறித்த காணொளி உண்மையானது என்றால் ஆஷு மாரசிங்கவை கைது செய்து தண்டனை வழங்குமாறும் இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்த செயற்பாடு சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறித்த நபர் சிறுவர்கள், விலங்குகள் மற்றும் சமூகத்திற்கு அச்சுறுத்தல் எனவும் அந்த அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!
இலங்கை

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
இலங்கை

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

March 31, 2026
பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை

பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை

March 31, 2026
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026

Recent News

போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

March 31, 2026
பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை

பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை

March 31, 2026
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version