லூசி வில்லியம்சன்
பதவி,மத்திய கிழக்கு நிருபர், இஸ்ரேல் குறித்த செய்திகளை அளிப்பவர்
இஸ்ரேலைச் சேர்ந்த அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன், ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் இந்த மாதம் திராட்சைப்பழங்களை அறுவடை செய்துள்ளனர்.
இது கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். அவர்கள் வசிக்கும் பகுதி கடந்த வருடம் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்தது, எரிந்து கிடக்கும் அண்டை வீடுகளுக்கு நடுவே அவர்கள் இந்த அறுவடையைச் செய்துள்ளனர்.
இஸ்ரேலின் கஃபர் அஸாவில் உள்ள அவர்களது வீட்டில், வாராந்திர பார்பிக்யூ பார்ட்டிகளுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படுகிறது இந்த திராட்சைச் சாறு. ராணுவ வீரர்கள் மட்டுமே அவர்களின் விருந்தினர்கள்.
காஸாவிலிருந்து 2 கிமீ (1.2 மைல்) தொலைவில் உள்ள கஃபர் அஸா, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழுவால் குறிவைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். ஹமாஸின் இந்த தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அடுத்தடுத்த நாட்களில், இஸ்ரேலின் பிற பகுதிகளின் ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
bbc











Discussion about this post