இன்றிரவு ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்களை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பர சேவைகள்
அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை பிற்பகுதியில், நாடு முழுவதும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தடுத்து வருவதாகக் கூறியது.
ஈரானிய ட்ரோன் ஒன்று எண்ணெய் ஆலையில் தீயை ஏற்படுத்தியதாக புஜைரா அமீரகம் தெரிவித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக புஜைரா ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
உடனடியாக எந்தவொரு உயிரிழப்புச் செய்தியும் இல்லை. ஈரானிடமிருந்து உடனடியாக எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை




Discussion about this post