அண்மையில் தமிழகத்தில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் அம்பானி தமிழகத்தில் இனி தொழில் செய்ய விரும்புவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் பற்றிய செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன. இன்று அவர்களின் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடக்க இருக்கிறது.
ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கும் அளவிற்கு நிறைய பிரம்மிப்பான விஷயங்கள் நடக்க இருக்கின்றன.
இவர்களின் திருமணத்தில் ஹாலிவுட் பாடகி ரிஹன்னா கச்சேரி நடத்த உள்ளார். அதற்காக அவர் ரூ. 66 முதல் ரூ. 74 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.






Discussion about this post