சுதந்திரம் அடைந்ததில் இருந்து காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய போதே பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்க, உள்கட்டமைப்பு, முதலீடு, புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகிய நான்கு தூண்களில் நாடு கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.




Discussion about this post