இலங்கைக்கு எதிராக குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 113 ரன்கள் விளாசினார்.சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 45ஆவது சதமாக அமைந்தது. அதேவேளையில் சொந்த மண்ணில் விராட் கோலி அடித்துள்ள 20ஆவது சதமாகவும் இது அமைந்தது. இந்த வகையில் இதற்கு முன்னர் சொந்த மண்ணில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 20 சதங்கள் விளாசியிருந்தார். தற்போது விராட் கோலி அந்த சாதனையை டெண்டுல்கருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விராட் கோலி இந்த மைல் கல்லை 99 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை அடித்திருந்தார். உலக கிரிக்கெட் அரங்கில் இவர்களுக்கு அடுத்த இடங்களில் தென்னாபிரிக்காவின் ஹசிம் ஆம்லா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 14 சதங்களை சொந்த மண்ணில் அடித்திருந்தனர்.
விராட் கோலி இந்த மைல் கல்லை 99 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை அடித்திருந்தார். உலக கிரிக்கெட் அரங்கில் இவர்களுக்கு அடுத்த இடங்களில் தென்னாபிரிக்காவின் ஹசிம் ஆம்லா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 14 சதங்களை சொந்த மண்ணில் அடித்திருந்தனர்.
சதம் அடித்தது குறித்து விராட்கோலி கூறும்போது, “சிறிய ஓய்வு மற்றும் இரு பயிற்சிக்கு பிறகு இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினேன். தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் நான் எனது இயல்பான ஆட்டத்தை ஆடினேன். இரு பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதிர்ஷ்டம் பெரிய பங்கை வகிக்கிறது. இதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்” என்றார்.





Discussion about this post