இலங்கையில் வட்ஸ்எப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
வட்ஸ்எப், தொலைப்பேசி, குறுந்தகவல் என அனைத்தும் பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு, விபரங்கள் சேமிக்கப்பட்டு வருவதாகச் சமுக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
அவ்வாறான எந்த நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Discussion about this post