சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு போஷாக்கு நிறைந்த பிஸ்கட் வகையொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிறார்களுக்கு தேவையான முட்டை போன்ற சத்தான உணவுகளை குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post