மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தங்கள் நேற்று (புதன்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு நேற்றும், நேற்று முன்தினமும் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற்மை குறிப்பிடத்தக்கது.




Discussion about this post