ஹோமாகம மற்றும் கொஸ்கொடை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வகையில் ஹோமாகம நியந்தகலவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் கொஸ்கொடை பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.




Discussion about this post