Wednesday, April 15, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

அஸ்வெசும திட்டத்தை அரசியலாக்காதீர்- அரசாங்கம் வேண்டுகோள்!

by editor
June 26, 2023
in இலங்கை
0 0
A A
0
கோழி,முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது
Share on FacebookShare on Twitter

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கப்படுகிறது.

அத்தோடு, ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் வேலைத்திட்டத்தின் தரவு சேகரிப்புப் பணியில் 6728 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 3190 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 494 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 205 கிராம உத்தியோகத்தர்களும், 1127 இதர உத்தியோகத்தர்களும், 1712 தற்காலிக ஆட்களும் அடங்குவர்.

பிரதேச அலுவலக மட்டத்தில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் தரவுகளைக் கண்காணித்து, மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பிறகு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார்.

பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது குறித்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு தேவைப்படும் நபர் அல்லது குடும்பம் இந்த நன்மையை இழந்திருந்தால், இந்தக் காலப்பகுதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக விசாரித்து அதனை சரிசெய்வதற்கு வாய்ப்பும் உள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதே அஸ்வெசும திட்டத்தின் அடிப்படை நோக்கமே ஒழிய, வெறும் அரசியல் செயற்பாட்டின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல என அரசாங்கம் வலியுறுத்துகிறது.

பல்வேறு பிரசாரங்களாலும் தனிப்பட்ட அழுத்தங்களாலும் குழப்பமடையாமல், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாவிட்டாலோ அல்லது தகுதியில்லாத நபரின் பெயர் அதில் இடம் பெற்றிருந்தாலோ, பிரதேச செயலக அலுவலகங்களின் ஊடாக அது தொடர்பில் ஆராயுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் எந்த பிரச்சினையையும் பிரதேச செயலாளரின் ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Posts

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கை

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

April 14, 2026
முஜிபுர் CID யில்
இலங்கை

முஜிபுர் CID யில்

April 14, 2026
புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்
இலங்கை

புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

April 12, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

April 14, 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

April 14, 2026
இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை? பாகிஸ்தான் விடுத்த அதிரடி அழைப்பு!

இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை? பாகிஸ்தான் விடுத்த அதிரடி அழைப்பு!

April 14, 2026
ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

April 14, 2026

Recent News

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

April 14, 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

April 14, 2026
இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை? பாகிஸ்தான் விடுத்த அதிரடி அழைப்பு!

இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை? பாகிஸ்தான் விடுத்த அதிரடி அழைப்பு!

April 14, 2026
ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

April 14, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version