திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றுள்ள நிலையில் காயம் அடைந்த இருவம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Discussion about this post