எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






Discussion about this post