தொடர்ச்சியாக வைத்தியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் வைத்தியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில்; மத்திய குழு கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குதீர்மானித்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.






Discussion about this post