Friday, February 13, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

“விஸ்கி வடிகட்டிய கழிவு நீரில் பசுமை எரிபொருள்” ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

by Editor
February 28, 2024
in அறிவியல்
0 0
A A
0
“விஸ்கி வடிகட்டிய  கழிவு நீரில் பசுமை எரிபொருள்” ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
Share on FacebookShare on Twitter

விஸ்கி வடிகட்டிய கழிவுநீரினை பயன்படுத்தி பசுமை எரிபொருளை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

எரிபொருள் என்பது மனிதனின் முக்கிய தேவையாக உள்ளது. ஸ்காட்லாந்த் எடின்பர்க் ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விஸ்கி வடிகட்டிய கழிவுநீரிலிருந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்துள்ளனர்.

1 கிலோ பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய 9 கிலோ தண்ணீர் தேவைப்படுகிறது. 1 லிட்டர் மால்ட் விஸ்கி உற்பத்தியில் இருந்து சுமார் 10 லிட்டர் எச்சம் உருவாகிறது.

பொதுவாக ஹைட்ரஜன் சூரிய ஒளி அல்லது காற்று போன்ற புதுப்பிக்கதக்க மூலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. மின்னாற்பகுப்பு முறையில் மின்சாரத்தைச் செலுத்தி, நீர் மூலக்கூறிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் தனியாகப் பிரிக்கப்படுகிறது.

மின்னாற்பகுப்பு முறை அல்லது மின்னாற்பகுப்பு செய்யும் சாதனங்கள் புதிய நீரில் மட்டுமே செயல்படும். கழிவுநீரைச் சேர்க்கும்போது அந்த சாதனங்கள் செயலிழந்து போகின்றன. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் நானோ துகள்கள் மூலம் இந்த சவாலைச் சமாளிக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.
தூய்மையான நீருக்குப் பதிலாக விஸ்கி உற்பத்தியில் கிடைக்கும் கழிவுநீரிலிருந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக இவர்கள் புதிய நானோ அளவிலான மெட்டிரியலை உருவாக்கினர். இந்த நானோ அளவிலான பொருள் மனித முடியின் விட்டத்தில் 10,000 மடங்கு இருக்கும். கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இந்த நானோ துகள்கள் `நிக்கல் செலினைடு’ என்று அழைக்கப்படுகின்றன.

நானோ மெட்டிரீயலை பயன்படுத்தி சுத்தமான புதிய நீருக்கு பதிலாக கழிவுநீரைப் பயன்படுத்தினர். இது புதிய நீருடன் ஒப்பிடுகையில் பசுமை ஹைட்ரஜனை சற்று அதிக அளவில் உற்பத்தி செய்தது.

இது குறித்த தகவல்கள் `Sustainable Energy & Fuels’ என்ற இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த இதழின் இணை ஆசிரியர் சுதாகர் பிச்சைமுத்து ஒரு செய்திக் குறிப்பில், “கிரகத்தைப் பாதுகாக்கத் தூய்மையான நீர் மற்றும் பிற இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

எனவே அசுத்தமான தண்ணீரில் இருக்கும் கழிவுபொருட்களை அகற்றுவதன் மூலம், டிஸ்டில்லரி கழிவுநீரை எவ்வாறு பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குப் பயன்படுத்துவது என்பது குறித்து இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்தியது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
அறிவியல்

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

February 8, 2026
மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்
அறிவியல்

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்

January 13, 2026
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்
அறிவியல்

ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

January 13, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
‘தீகல சமன்’ என்பவரின் 02 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

‘தீகல சமன்’ என்பவரின் 02 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

February 12, 2026
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பு!

February 12, 2026
வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

February 12, 2026
சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

February 12, 2026

Recent News

‘தீகல சமன்’ என்பவரின் 02 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

‘தீகல சமன்’ என்பவரின் 02 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

February 12, 2026
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பு!

February 12, 2026
வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

February 12, 2026
சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

February 12, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version