Sunday, February 15, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

by editor
February 15, 2026
in ஆன்மீகம்
0 0
A A
0
மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை
Share on FacebookShare on Twitter

மகா சிவராத்திரி வழிபாடு என்பது ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர்களின் வழிபாட்டு முறைக்கு ஏற்ப நிச்சயம் பலன் கிடைக்கும். இருந்தாலும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுக்குரிய சிவ வழிபாட்டு முறைகள், தங்கள் ராசிக்கு ஏற்ற சிவாலயம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு மகா சிவராத்திரி அன்று வழிபட்டால் சிவபெருமானின் அருளை முழுவதுமாக பெற முடியும்.எந்த ராசிக்காரர்களும் மகா சிவராத்திரி அன்று எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகா சிவராத்திரி விரதம் இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொதுவாகவே அனைவரும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்றாலும், சிவபெருமானின் அருளை முழுவதுமாக பெற 12 ராசிக்காரர்களும் எந்த கோவிலுக்கு சென்று, எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிக்காரர்களுக்கான மகா சிவராத்திரி வழிபாட்டு முறை :

  1. மேஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று, இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்குவது மிகவும் நல்லது.
  2. ரிஷபம் – திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் அல்லது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம். சிவன் மற்றும் நந்தி இருவரையும் சேர்த்து அடி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாமல் ஜெபிப்பது சிறப்பு.
  3. மிதுனம் – சிதம்பரம், திருச்செங்கோடு, காளஹஸ்தி அல்லது அருகிலுள்ள சிவாலயத்திற்கு செல்லலாம். சிவ மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை சொல்ல வேண்டும். சிவனுக்கு மோர் அல்லது கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வதும், பஞ்சாட்சர மந்திரம் கூறுவதும் நன்மை தரும்.
  4. கடகம் – வேலூர் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், திருக்கடையூர் ஆகிய தலங்களுக்கு செல்லலாம். சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிக்கலாம் அல்லது நீங்களே அபிஷேகம் செய்யலாம். கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் பால் வாங்கிக் கொடுப்பது சிறப்பு.
  5. சிம்மம் – திருவண்ணாமலை, சிதம்பரம் அல்லது அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று வழிபடலாம். அருணாச்சலேஸ்வரரை நினைத்து 5 தீபங்கள் ஏற்றி வழிபடவும். பாலில் சிவப்பு சந்தனம் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது அதிக பலன் தரும்.
  6. கன்னி – காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று அடி பிரதக்ஷிணம் செய்து வணங்கவும். கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.
  7. துலாம் – மதுரை மீனாட்சி சொக்கநாதர், சிதம்பரம் அல்லது காளஹஸ்தி கோவிலுக்கு செல்லலாம். நீண்ட தூர பயணம் மேற்கொண்டு இறைவனைத் தரிப்பது சிறப்பு, தேவாரம், திருவாசகர் பாடல்களை பாடி வழிபடலாம். சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு.
  8. விருச்சிகம் – திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். சிவராத்திரி அன்று கோவிலை சுத்தம் செய்தல், பக்தர்களுக்கு நீர் வழங்குதல் போன்ற உழவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். வெல்லம் கலந்த நீரை சிவனுக்கு நைவேத்தியம் செய்வது நல்லது.
  9. தனுசு – திருப்பரங்குன்றம் சிவன், திருவண்ணாம அருணாச்சலேஸ்வரர் ஆகிய கோவிலுக்கு செல்லலாம். உங்களால் இயன்ற அளவு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்து 5 தீபங்கள் ஏற்றி வழிபடவும். பஞ்சாட்சர மந்திரத்தை மனதார ஜெபிக்கவும்.
  10. மகரம் – காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் அல்லது அருகிலுள்ள சிவாலயத்திற்கு செல்லலாம். கோவிலுக்கு நடந்து சென்று, எண்ணிக்கையை கணக்கிடாமலும், பலனை எதிர்பார்க்காமலும் சிவனை வலம் வந்து பாடல்கள் பாடி வழிபடவும். அபிஷேகம் செய்வதும், பூஜை பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் சிறப்பு.
  11. கும்பம் – காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய கோவில்களுக்கு செல்லலாம். சிவபெருமானை நினைத்து மனதிற்குள் அவர் நாமத்தை ஜெபித் தியானம் செய்யவும். சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு.
  12. மீனம் – வேலூர் ஜலகண்டேஸ்வரர், வேதாரண்யம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம். பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல் மற்றும் கோவிலில் உங்களால் முடிந்த தொண்டு பணிகளை செய்யவும். குங்குமப்பூ கலந்த பாலில் அபிஷேகம் செய்வதும், பஞ்சாட்சர மந்திரம் கூறுவதும் சிறப்பான பலனை தரும்.

Related Posts

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
இன்று பரணி தீபம் 2025.. வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறையும், நல்ல நேரமும்..
ஆன்மீகம்

இன்று பரணி தீபம் 2025.. வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறையும், நல்ல நேரமும்..

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

February 15, 2026
தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

February 15, 2026

Recent News

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

February 15, 2026
தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

February 15, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version