வெளியிலிருந்து பார்த்த அனைவரும், அவள் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்தனர். ஆனால் அந்த டிவி 3 ஆண்டுகளாக நின்றதே இல்லை என்றும், அதன் முன் அவள் உயிருடன் அமர்ந்திருக்கவில்லை என்றும் உலகம் அறிந்தது மிகவும் தாமதமாகத்தான்!
லண்டன் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கைக்குள், ஒரு குடியிருப்பில் மூன்று ஆண்டுகள் உலகத்தால் மறக்கப்பட்ட ஒரு இளம் பெண் – Joyce Carol Vincent.
அவர் மரணிக்கும் போது வயது 38. அழகாகப் பாடக்கூடியவர், பெரிய நிறுவனங்களில் வேலை செய்தவர். ஆனால் 2003 டிசம்பரில் அவர் இறந்தபோது, அந்த செய்தி வெளி உலகிற்கு தெரிய 2006 ஜனவரி 25 வரை காத்திருக்க வேண்டி வந்தது!
மூன்று ஆண்டுகள் அந்த வீட்டில் டிவி இயங்கிக் கொண்டே இருந்தது. ஜன்னல் வழியாக தெரிந்த அந்த ஒளியைப் பார்த்து, ஜோய்ஸ் உள்ளே இருப்பார் என்று அயலவர்கள் நினைத்தனர்.
கிறிஸ்துமஸ் பரிசுகளை மூடிக்கொண்டிருந்தபோதே அவர் மரணமடைந்தார். கண்டுபிடிக்கப்பட்ட போது, கையில் பாதியாக மூடப்பட்ட பரிசுப் பொதியும் இருந்தது.
வங்கி கணக்கிலிருந்து தானாகவே வீட்டு வாடகையும் மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதால், யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இறுதியில் வாடகை நிலுவையாகியபோது வீட்டைத் திறந்து பார்த்தபோதுதான், எலும்புக்கூட்டாக மாறிய நிலையில் ஜோய்ஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.
வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தையும் அயலவர்கள் குப்பை குழாயிலிருந்து வருவதாக நினைத்து புறக்கணித்தனர்.
மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால் – அவருக்கு குடும்பமும் நண்பர்களும் இருந்தனர். ஆனால் மெதுவாக எல்லோரிடமிருந்தும் அவர் விலகிப் போயிருந்தார். பெரிய நகரங்களில் மனிதர்கள் எவ்வளவு “Invisible” ஆக மாறக்கூடும் என்பதற்கான அதிர்ச்சிகரமான உதாரணம் தான் ஜோய்ஸ்.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘Dreams of a Life’ என்ற ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.









Discussion about this post