மிஹிந்தலை பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று (03) மாலை ஐஸ் போதைப்பொருளுடன், மிஹிந்தலை அம்பதலாஹம பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், இன்றைய தினம் அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்ததாகவும் அறிவிகப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (04) அதிகாலை அவர்கள் வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டின் பூட்டைத் திறந்து தப்பிச் சென்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரசிறி ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.











Discussion about this post