நடிகை த்ரிஷாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்த பதிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவரோ வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார்.

திரிஷா ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென தவறி விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட த்ரிஷா, சுற்றுலா பாதியில் முடிந்தது என குறிப்பிட்டார்.







Discussion about this post