தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஜெயா முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு முழு உரிமையும் உள்ள பழைமையான முனையமான ஜெயா முனையத்தின் விரிவாக்கத்தை துரிதப்படுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜாயா முனையத்தில் அவசர ஆய்வின் போது அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அபிவிருத்தித் திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடலை நிரப்பி முனையத்தை அமைக்கும் பணியை ஒப்படைத்த சீன நிறுவனத்தை உடனடியாக வரவழைத்து, ஒப்பந்தத்தின் அடிப்படையில் திட்டத்தை முடிக்குமாறு தெரிவிக்கும்படி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.






Discussion about this post