Tuesday, January 27, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்

by editor
October 30, 2022
in உலகம்
0 0
A A
0
தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்
Share on FacebookShare on Twitter

தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ‘Halloween’ (ஹலோவீன்) எனப்படும் நிகழ்வில் பங்கேற்ற பாரிய அளவிலான கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஒடுக்கமான பாதையொன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவாள மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு யிரிழந்தவர்களில் 19 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக, இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

27 வயதான குறித்த நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீனா, நோர்வே, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்குவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவில் கொவிட்-19 கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் அந்நாட்டின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற முதல் நிகழ்வாக இது அமைந்திருந்ததனால், இதில் அதிகளவானோர் பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் சுமார் 82 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கட்டுக்கடங்காமல் போனதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஏற்பட்ட நெருக்கத்தில் கீழே வீழ்ந்த பலர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இரவு 10.20 மணியளவில் இந்நிகழ்வு உச்சத்தை தொட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தோரில் பலர் அங்கிருந்த இரவு நேர மதுபான விற்பனை கேளிக்கை கூடத்திற்கு அருகே இருந்தவர்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினரும் இளைஞர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலம் ஒருவர் குறித்த மதுபான விற்பனை கேளிக்கை கூடத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கூட்டம் சூழ்ந்து கொண்டதால் இச்சம்பவம் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரணித்தவர்களை நினைவுகூரும் வகையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் மீண்டும் திரும்பும் என்று நம்பப்படும் இந்நாளில், அந்த ஆவிகளைத் தடுக்க நெருப்பு மூட்டும் நிகழ்வாக ஹலோவீன் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு வேடிக்கையாக மக்கள் பல்வேறு பயங்கரமான பயமூட்டும் ஆடைகளை அணிந்து வெவ்வேறு வகையில் இந்நிகழ்வை கொண்டாடுவது வழக்கமாகும்.

Related Posts

உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை
உலகம்

உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை

January 21, 2026
சிவில் மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் $354.9 மில்லியன் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்….
உலகம்

நைல்நதி நீர் தொடர்பான பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தயார் – அமெரிக்க ஜனாதிபதி

January 18, 2026
சிவில் மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் $354.9 மில்லியன் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்….
உலகம்

இந்த முறை தோட்டா மிஸ் ஆகாது – டொனால்ட் ட்ரம்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ஈரான்

January 16, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

பதவி விலகத் தயார் – பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு – பரபரப்பாகும் இலங்கை அரசியல்

January 24, 2026
ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும் கோப்பையை, இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும் கோப்பையை, இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

January 21, 2026
உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை

உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை

January 21, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

January 21, 2026

Recent News

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

பதவி விலகத் தயார் – பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு – பரபரப்பாகும் இலங்கை அரசியல்

January 24, 2026
ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும் கோப்பையை, இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும் கோப்பையை, இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

January 21, 2026
உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை

உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை

January 21, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

January 21, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version