தான் விஜய்யுடன் முதல் முறையாக சேர்ந்து படம் பண்ணியபோது உதவி இயக்குநர்களை ஏமாற்றியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யின் பிகில் படத்துடன் புதுப் பையன் லோகேஷ் கனகராஜின் கைதி படம் வருகிறதாம். பிகிலுக்கு முன்னாடி இந்த கைதி எல்லாம் நிற்கவே முடியாது. பாவம் தேவையில்லாமல் பிகிலுடன் மோதி தோற்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷுக்கு தான் தெரியாது, இந்த கார்த்தியுமா விஜய் படத்துடன் மோத தயாராகிவிட்டார் என்று அப்பொழுது பேசப்பட்டது. ஆனால் பிகிலுடன் வந்த கைதி சூப்பர் டூப்பர் ஹிட்டானது
அடேங்கப்பா, விஜய் படத்துடன் தன் படத்தை விட்டு ஹிட் பார்த்துவிட்டாரே, கில்லாடி தான் இந்த லோகேஷ் கனகராஜ் என திரையுலகினரும், ரசிகர்களும் பேசினார்கள். கைதியை அடுத்து லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பையன் ஏதோ வித்தியாசமா படம் எடுக்கிறான். நாமும் அவன் இயக்கத்தில் நடிக்கலாம் என முடிவு செய்து லோகேஷுக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயர் வைத்தார்கள். அந்த மாஸ்டர் பெயர் விபரம் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் படத்திற்கு மாஸ்டர் என்கிற தலைப்பை தேர்வு செய்துவிட்டாராம் லோகேஷ். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அந்த தலைப்பு கசிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் தன் உதவி இயக்குநர்களை குடும்பத்தில் ஒருவராக நடத்துபவர். அப்படி இருக்கும்போது அவர்களிடம் மாஸ்டர் தலைப்பை சொன்னால் சந்தோஷத்தில் எங்காவது உளறிவிடுவார்களோ என்கிற பயம் லோகேஷுக்கு. இதையடுத்து தம்பிகள் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று உதவி இயக்குநர்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்.
விஜய்ணா படத்திற்கு வாத்தி என்கிற தலைப்பை தேர்வு செய்திருக்கிறேன் என உதவி இயக்குநர்களிடம் தெரிவித்திருக்கிறார் லோகேஷ். அவர்களும் அதை நம்பிவிட்டார்கள். சுமார் ஒரு மாத காலமாக விஜய் படத்தின் தலைப்பு வாத்தி என மெயின்டெயின் செய்திருக்கிறார் லோகேஷ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போது மாஸ்டர் என்கிற தலைப்பை பார்த்து உதவி இயக்குநர்கள் ஷாக் ஆகிவிட்டார்களாம். ஏண்ணே, எங்களுக்கே விபூதி அடுச்சுட்டல என கேட்டிருக்கிறார்கள்.






Discussion about this post