அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய ஒசிரிஸ் – ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம் நேற்று உட்டா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
குறித்த விண்கலம் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விண்ணுக்கு ஏவப்பட்டிருந்தது. இந்தநிலையில், சிறு கோள்களின் தூசி துகள் மாதிரிகளை அது பூமிக்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும் இதன் மூலம் பூமி குறித்து பல தகவல்களை பெற முடியும் என நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது





Discussion about this post